'குழல்இனிது: யாழ்இனிது' என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்அப்படீன்னு சொல்வாங்க.மழலை மொழிங்கரது கேட்க்கும் போது அவ்ளோ நல்லா இருக்கும்.நாம எல்லாருமே பொதுவா சின்ன வயசுல நிறைய மழலை மொழில பேசியிருப்போம்.இப்பகூட நம்ம வீடுங்கள்ள,நாம பேசினத சொல்லிட்டு இருப்பாங்க.ஏன்
உதாரணத்துக்கு எடுத்துகிட்டீங்கன்னா,எங்க வீட்ல என்ன வெச்சு நக்கல் அடிக்கர ஒரு விசயம் இருக்கு. நான் ஒரு ஒன்றரை வயசு குழந்தைய்யா இருக்கும்பொது ஜன்னல் கிட்டஉட்கார்ந்து வேடிக்கை பாத்துகிட்டே இருந்தேனாம் அப்போ தெருவுல"ரூபாயிக்கு ரெண்டு"னு குரல் கேட்டுட்டு "அம்மா தெருவுல ரூபா விக்கரானாம்.ஒரு ரூபா கொடுத்தா, ரெண்டு ரூபா தருவாராம்.போய் வாங்கிக்கோ"ன்னுசொன்னேனாம்.அம்மா போய் பார்த்தா தெருவுல எலுமிச்சம் பழம் வித்தாங்களாம் :P.
என்னோட கசின் ஒருத்தனுக்கு "க" வராது."த"ன்னு தான்சொல்லுவான். அவன் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து "பெரியம்மா அம்மா டீவதிதத்தி தேதாந்த"னான்..எங்களுக்கு அவன் சொல்றது என்னானு புரிஞ்சுக்கவேகொஞ்ச நேரம் பிடிச்சது.அவன் கேட்டது டீ வடிகட்டி!!
அவன ஒரு நாள் கோவிலுக்கு கூட்டிட்டு போனா அர்ச்சனைபண்ணும் போது நட்சத்திரம்,ராசி கேட்டா நான் சொல்றதுக்கு முன்னாடியே"நான் தண்ணி ராசி மாமா"ங்கிறான்..அப்புறம் தான் தெரியுது அவன் சொல்ல வந்தது"கன்னி"ராசின்னு:)
இப்படி மழலை மொழி கேட்க்கும் போது நமக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கும்.என்னோட பெரிய பொழுதுபோக்கே நண்டும் சிண்டுமா நாலு பசங்களகூப்பிட்டு வெச்சு விளையாடறது தான்.கள்ளம் கபடம் இல்லாம வெகுளியா நீயாநானானு போட்டி இல்லாம வெளிப்படைய்யா பேசும்.
ஆனாநான் அப்படி வாண்டுங்களோட பேசி விளையாடி "பல்பு" வாங்கிருக்கேன்.எங்க வீட்டு பக்கத்துல ஒரு சின்னபொண்ணு ரெண்டு வயசு ஆகியும் பேசாம இருந்தான்னு அவங்க அம்மா வருத்தபட்டாங்க.ஆனா அவ பேச அரம்பிச்ச அப்புறம் எல்லாருமே வாய் அடச்சுபோனோம்.அவளுக்கு நான்னா செம லொள்ளு,நக்கல் எல்லாம். அவளோட நல்ல கதை பேசறது,விளையாடறதுன்னு ஒரே ஜாலியா இருந்தேன்.
யாரோ கண்ணு வெச்சு, நடுவுல ஆணி அதிகமாகி இன்னிக்கி நாள் என்னானு தெரியாம ஒரு மாசம் ஆப்பீஸே கதின்னு இருந்தேன்.ராத்திரி ஆபீஸ்லேர்ந்து வீட்டுக்கு வரும் போது அவளும் அவங்க அம்மாவும் அவங்க அப்பாக்காக வெயிட் பண்ணிகிட்டு இருப்பாங்க.
இப்படி இருக்கும் போது,
ஒரு நாள் எங்க அப்பா ஏதோ அசோசியேஷன் பத்தி பேச அவங்க வீட்டுக்கு போயி கதவதட்டினா, இந்த அம்மா ஜன்னல் வழியா எட்டி பாத்துட்டு "அப்பா நம்ம ரம்யாவோடஅப்பாதான்பா கதவ தொற"ன்னு சவுண்டு விட்டிருக்கா."யாரு டா ரம்யா"ன்னு அவ அப்பா கேட்டா "தினம் ராத்திரி பிசாசு வர நேரத்துக்கு வீட்டுக்கு வரீங்கனு அம்மா சொல்லுவாங்க இல்ல,அதே மாதிரி வருவா ரம்யாவும்".இதை கேட்ட அவருக்கும்ஷாக்கு,எங்க அப்பாவுக்கும் தான்.நாம வீட்ல எப்படி பேசறோமோ அதையே தான்குட்டீசும் பேசும்.அதனாலே நாம பேசும் வார்தைகளை பார்த்து பேசனும்
(ஸ்ஸ் அப்பா கருத்து சொல்லியாச்சு).
எங்க அம்மா வீட்ல சில குட்டி பசங்களுக்கு டியூஷன் சொல்லிகொடுப்பாங்க.அதுல நந்தினினு ஒரு பொண்ணு நல்ல சேட்டை பண்ணுவா. நான் மேலசொன்ன குட்டி பொண்ணு என்ன கிண்டல் பண்ணதால பீலிங்ஸ் ஆகி (சும்மா கிலியன்ட் செர்வெர் டவுன் ஆனது தான் உண்மை) 6 மணி பஸ் புடிச்சு வந்தா எங்க வீட்ல படிச்சிட்டு இருந்த அவ "என்ன அக்கா எப்ப வந்தீங்க ஊர்லேர்ந்து"னா."என்ன நந்தினி நான் ஊர்ல
தானே இருக்கேன்"னு சொன்னா
"உங்கள பாத்தே ரொம்ப நாள் ஆச்சா அதான்"ங்கரா..இதை கேட்ட எங்க அம்மா ரியாக்க்ஷன் நான் சொல்லவே தேவைஇல்லை..சரி விடு ரம்யா இதெல்லாம் உனக்கு சதாரணம்னு நெனைச்சிட்டு விட்டுடேன்.ஆனா விதிவலியது..விடாம அவ "ஏன் அக்கா இனிமே எங்களோட எல்லாம் விளையாட மாட்டீங்களா எப்பவுமே ஆஃபீஸ்தானா"அப்படின்னு சொன்னா. எங்க அம்மா நடுவுல வந்து ஏதாவதுசொல்லிருவாங்களோன்னு
"ஏய் நந்தினி சும்மா லொட லொடன்னு இப்ப கேள்விஎல்லாம் கேக்காதே 4த் ஸ்டேண்டட் வந்துட்டே ஒழுங்கா படி"ன்னு சொன்னா "அய்யோ அக்கா வேலைக்கு போயி ரொம்பவே எல்லாம் மறந்துடீங்க..நான் இப்ப 5த் ஸ்டேண்டட் "ங்கரா.
சரிடா நாம இனிமே இங்க இருந்த நல்லதில்லேனுகோவிலுக்கு ஒடிட்டேன்.
ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்தா அப்பா "என்னம்மா உன் பிரண்டு என்னோட காபி எல்லாம்சாப்டுட்டா".அது யாருப்பா ன்னு நான் நினைக்கும் போதே "எல்லாம் வசு தான் மார்கெட்ல பார்த்தோம் அவளையும் அவ அப்பாவையும்.சேர்ந்து காபி சாப்டோம்.அவரு அன்னிக்கி முதல்ல நீ அவளோடவிளையாடற சின்ன பொண்ணுன்னு நினைச்சாராம்.உங்க பொண்ணு வேலைக்குபோறாங்கண்ணு தெரியாது.இவ கிட்ட அக்கான்னு கூப்பிட சொன்னா,இல்ல ரம்யாஎன்னோட டாக்டர் ஸெட் வெச்சு வெளயாடுவா அதலனால அக்கான்னு எல்லாம்கூப்பிடமாட்டேன்னு சொல்றா சார்".
"என் பொண்ணு குழந்தை மனசு உள்ளவனு சொல்லுங்க பா" ன்னு சொல்லிட்டு அந்த எடத்த விட்டு எஸ் அகிட்டேன்.
இப்ப நினைக்கும் போது சிரிப்பா வருது. ஆனா அந்த நினைவுகள் ரொம்ப பசுமைய்யா, சந்தோஷமா இருக்கு.மனசு சரி இல்லேன்னா ஒரு குழந்தைய போயி பாருங்க.அப்படியே லேசாகிடும்.
நேத்து நான் எங்க அபார்ட்மெண்ட்ல நடந்து வரும் போது 3 குட்டீஸ்வளையாடிக்கிட்டு இருந்தாங்க.அவங்க பால் என்னோட கால் கிட்டவிழுந்துடுச்சு.எடுத்து கொடுத்தா "திதீ ஹமாரே சாத் கேலோனா(அக்கா எங்களோட விளையாட வாங்களேன்... )"ங்கராங்க..
செரிடாப்பா இங்கயும் தொடருதானு நினைச்சுக்கிட்டே "மே தோடிதேர் கே பாத் ஆவூங்கி(நான் கொஞ்ச நேரம் பொருத்து வரேன்)"ன்னு சொல்லி சிரிச்சுக்கிட்டே வந்தாலும் மனசு கெடந்து அடிச்சிகிட்டே தான் இருந்தது :(
P.S: நான் தமிழில் பிழை இல்லாமல் எழுத உதவிய திவ்யாவிற்கு நன்றி!
உதாரணத்துக்கு எடுத்துகிட்டீங்கன்னா,எங்க வீட்ல என்ன வெச்சு நக்கல் அடிக்கர ஒரு விசயம் இருக்கு. நான் ஒரு ஒன்றரை வயசு குழந்தைய்யா இருக்கும்பொது ஜன்னல் கிட்டஉட்கார்ந்து வேடிக்கை பாத்துகிட்டே இருந்தேனாம் அப்போ தெருவுல"ரூபாயிக்கு ரெண்டு"னு குரல் கேட்டுட்டு "அம்மா தெருவுல ரூபா விக்கரானாம்.ஒரு ரூபா கொடுத்தா, ரெண்டு ரூபா தருவாராம்.போய் வாங்கிக்கோ"ன்னுசொன்னேனாம்.அம்மா போய் பார்த்தா தெருவுல எலுமிச்சம் பழம் வித்தாங்களாம் :P.
என்னோட கசின் ஒருத்தனுக்கு "க" வராது."த"ன்னு தான்சொல்லுவான். அவன் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து "பெரியம்மா அம்மா டீவதிதத்தி தேதாந்த"னான்..எங்களுக்கு அவன் சொல்றது என்னானு புரிஞ்சுக்கவேகொஞ்ச நேரம் பிடிச்சது.அவன் கேட்டது டீ வடிகட்டி!!
அவன ஒரு நாள் கோவிலுக்கு கூட்டிட்டு போனா அர்ச்சனைபண்ணும் போது நட்சத்திரம்,ராசி கேட்டா நான் சொல்றதுக்கு முன்னாடியே"நான் தண்ணி ராசி மாமா"ங்கிறான்..அப்புறம் தான் தெரியுது அவன் சொல்ல வந்தது"கன்னி"ராசின்னு:)
இப்படி மழலை மொழி கேட்க்கும் போது நமக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கும்.என்னோட பெரிய பொழுதுபோக்கே நண்டும் சிண்டுமா நாலு பசங்களகூப்பிட்டு வெச்சு விளையாடறது தான்.கள்ளம் கபடம் இல்லாம வெகுளியா நீயாநானானு போட்டி இல்லாம வெளிப்படைய்யா பேசும்.
ஆனாநான் அப்படி வாண்டுங்களோட பேசி விளையாடி "பல்பு" வாங்கிருக்கேன்.எங்க வீட்டு பக்கத்துல ஒரு சின்னபொண்ணு ரெண்டு வயசு ஆகியும் பேசாம இருந்தான்னு அவங்க அம்மா வருத்தபட்டாங்க.ஆனா அவ பேச அரம்பிச்ச அப்புறம் எல்லாருமே வாய் அடச்சுபோனோம்.அவளுக்கு நான்னா செம லொள்ளு,நக்கல் எல்லாம். அவளோட நல்ல கதை பேசறது,விளையாடறதுன்னு ஒரே ஜாலியா இருந்தேன்.
யாரோ கண்ணு வெச்சு, நடுவுல ஆணி அதிகமாகி இன்னிக்கி நாள் என்னானு தெரியாம ஒரு மாசம் ஆப்பீஸே கதின்னு இருந்தேன்.ராத்திரி ஆபீஸ்லேர்ந்து வீட்டுக்கு வரும் போது அவளும் அவங்க அம்மாவும் அவங்க அப்பாக்காக வெயிட் பண்ணிகிட்டு இருப்பாங்க.
இப்படி இருக்கும் போது,
ஒரு நாள் எங்க அப்பா ஏதோ அசோசியேஷன் பத்தி பேச அவங்க வீட்டுக்கு போயி கதவதட்டினா, இந்த அம்மா ஜன்னல் வழியா எட்டி பாத்துட்டு "அப்பா நம்ம ரம்யாவோடஅப்பாதான்பா கதவ தொற"ன்னு சவுண்டு விட்டிருக்கா."யாரு டா ரம்யா"ன்னு அவ அப்பா கேட்டா "தினம் ராத்திரி பிசாசு வர நேரத்துக்கு வீட்டுக்கு வரீங்கனு அம்மா சொல்லுவாங்க இல்ல,அதே மாதிரி வருவா ரம்யாவும்".இதை கேட்ட அவருக்கும்ஷாக்கு,எங்க அப்பாவுக்கும் தான்.நாம வீட்ல எப்படி பேசறோமோ அதையே தான்குட்டீசும் பேசும்.அதனாலே நாம பேசும் வார்தைகளை பார்த்து பேசனும்
(ஸ்ஸ் அப்பா கருத்து சொல்லியாச்சு).
எங்க அம்மா வீட்ல சில குட்டி பசங்களுக்கு டியூஷன் சொல்லிகொடுப்பாங்க.அதுல நந்தினினு ஒரு பொண்ணு நல்ல சேட்டை பண்ணுவா. நான் மேலசொன்ன குட்டி பொண்ணு என்ன கிண்டல் பண்ணதால பீலிங்ஸ் ஆகி (சும்மா கிலியன்ட் செர்வெர் டவுன் ஆனது தான் உண்மை) 6 மணி பஸ் புடிச்சு வந்தா எங்க வீட்ல படிச்சிட்டு இருந்த அவ "என்ன அக்கா எப்ப வந்தீங்க ஊர்லேர்ந்து"னா."என்ன நந்தினி நான் ஊர்ல
தானே இருக்கேன்"னு சொன்னா
"உங்கள பாத்தே ரொம்ப நாள் ஆச்சா அதான்"ங்கரா..இதை கேட்ட எங்க அம்மா ரியாக்க்ஷன் நான் சொல்லவே தேவைஇல்லை..சரி விடு ரம்யா இதெல்லாம் உனக்கு சதாரணம்னு நெனைச்சிட்டு விட்டுடேன்.ஆனா விதிவலியது..விடாம அவ "ஏன் அக்கா இனிமே எங்களோட எல்லாம் விளையாட மாட்டீங்களா எப்பவுமே ஆஃபீஸ்தானா"அப்படின்னு சொன்னா. எங்க அம்மா நடுவுல வந்து ஏதாவதுசொல்லிருவாங்களோன்னு
"ஏய் நந்தினி சும்மா லொட லொடன்னு இப்ப கேள்விஎல்லாம் கேக்காதே 4த் ஸ்டேண்டட் வந்துட்டே ஒழுங்கா படி"ன்னு சொன்னா "அய்யோ அக்கா வேலைக்கு போயி ரொம்பவே எல்லாம் மறந்துடீங்க..நான் இப்ப 5த் ஸ்டேண்டட் "ங்கரா.
சரிடா நாம இனிமே இங்க இருந்த நல்லதில்லேனுகோவிலுக்கு ஒடிட்டேன்.
ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்தா அப்பா "என்னம்மா உன் பிரண்டு என்னோட காபி எல்லாம்சாப்டுட்டா".அது யாருப்பா ன்னு நான் நினைக்கும் போதே "எல்லாம் வசு தான் மார்கெட்ல பார்த்தோம் அவளையும் அவ அப்பாவையும்.சேர்ந்து காபி சாப்டோம்.அவரு அன்னிக்கி முதல்ல நீ அவளோடவிளையாடற சின்ன பொண்ணுன்னு நினைச்சாராம்.உங்க பொண்ணு வேலைக்குபோறாங்கண்ணு தெரியாது.இவ கிட்ட அக்கான்னு கூப்பிட சொன்னா,இல்ல ரம்யாஎன்னோட டாக்டர் ஸெட் வெச்சு வெளயாடுவா அதலனால அக்கான்னு எல்லாம்கூப்பிடமாட்டேன்னு சொல்றா சார்".
"என் பொண்ணு குழந்தை மனசு உள்ளவனு சொல்லுங்க பா" ன்னு சொல்லிட்டு அந்த எடத்த விட்டு எஸ் அகிட்டேன்.
இப்ப நினைக்கும் போது சிரிப்பா வருது. ஆனா அந்த நினைவுகள் ரொம்ப பசுமைய்யா, சந்தோஷமா இருக்கு.மனசு சரி இல்லேன்னா ஒரு குழந்தைய போயி பாருங்க.அப்படியே லேசாகிடும்.
நேத்து நான் எங்க அபார்ட்மெண்ட்ல நடந்து வரும் போது 3 குட்டீஸ்வளையாடிக்கிட்டு இருந்தாங்க.அவங்க பால் என்னோட கால் கிட்டவிழுந்துடுச்சு.எடுத்து கொடுத்தா "திதீ ஹமாரே சாத் கேலோனா(அக்கா எங்களோட விளையாட வாங்களேன்... )"ங்கராங்க..
செரிடாப்பா இங்கயும் தொடருதானு நினைச்சுக்கிட்டே "மே தோடிதேர் கே பாத் ஆவூங்கி(நான் கொஞ்ச நேரம் பொருத்து வரேன்)"ன்னு சொல்லி சிரிச்சுக்கிட்டே வந்தாலும் மனசு கெடந்து அடிச்சிகிட்டே தான் இருந்தது :(
P.S: நான் தமிழில் பிழை இல்லாமல் எழுத உதவிய திவ்யாவிற்கு நன்றி!